மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது -சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மருத்துவ முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் மாணவர்களுக்கு தரப்படும் ஊக்க மதிப்பெண்கள் இனி கிடையாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார்.
சென்னை: மருத்துவ உயர்கல்வியில் 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என்றும் கிராமப்புற அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கு சலுகை இல்லை என்றும் உயர்நீதிமன்ற 3-ஆவது நீதிபதி சத்யநாராயணா தெரிவித்தார்.
மருத்துவக் கவுன்சில் விதிப்படி நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களில் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண் சேர்க்கப்பட்டால் தனக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மேல்படிப்புக்காக இடம் கிடைத்துவிடும். எனவே, மருத்துவக் கவுன்சில் விதிகளின் அடிப்படையில் எனது ஊக்க மதிப்பெண்ணைக் கணக்கிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராஜேஷ் வில்சன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார்.

போராட்டம்
இதனால் தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையை மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்துவதா? இல்லை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்துவதா? என்பதில் சட்ட சிக்கல் எழுந்தது. இதுபோன்ற குழப்பமான உத்தரவால் தங்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரு நீதிபதிகள் விசாரணை
இது தொடர்பாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது. கடந்த 3-ம் தேதி இருவரும் தீர்ப்பளித்தனர். நீதிபதி கே.கே.சசிதரன் தனது தீர்ப்பில், மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டை பின்பற்றி நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு முழுஅதிகாரம் உள்ளது. தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக இல்லை என தீர்ப்பளித்தார்.

மாறுபட்ட தீர்ப்பு
ஆனால் அதே சமயம் நீதிபதி கே.கே.சசிதரனின் தீர்ப்பிற்கு முரணாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி வரும் மே 7-ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

3-ஆவது நீதிபதி தீர்ப்பு
இருவரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணா விசாரித்து வந்தார். அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளையே எம்.டி.எம்.எஸ் சேர்க்கையில் பின்பற்ற வேண்டும். எனவே அரசு மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பில் ஊக்க மதிப்பெண் கிடையாது என்று தீர்ப்பளித்தார்.

மேல்முறையீடு
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. இந்த தீர்ப்பால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே மேல் முறையீடு செய்வோம் என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications