For Daily Alerts
Just In
மிலாடி நபி... ஜனவரி 4-ம் தேதி மது விற்பனைக்கு தடை
சென்னை: நபிகள் பிறந்த தினமான மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் ஜனவரி 4-ம் தேதி மதுக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினம், மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதி முறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary
Chennai District collector M Sundaravalli ordered to close wine shops in Chennai on January 4th due to Miladi Nabi.
Story first published: Thursday, January 1, 2015, 9:10 [IST]