மோடி வெறும் புழுதிக்காற்று; பாஜக கூட்டணி உடைந்து நொறுங்கிவிடும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு: பாஜக கூட்டணி ஒரு வலுவிழந்த கட்டிடம் அது உடைந்து நொறுங்கிவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். மோடி வெறும் புழுதிக்காற்று. அந்த காற்றும் தற்போது அடங்கி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பலம் இல்லாத, வலுவிழந்த கட்டடமாக பா.ஜ.க. கூட்டணி இருக்கிறது. அதிலிருந்து சில செங்கல்கள் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. எனவே, அந்த கட்டிடம் விரைவில் நொறுங்கி விடும்.
காங்கிரஸ் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன். திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கும் நேரில் அழைப்பு விடுத்துள்ளேன்.
'கடந்த 2 மாதமாக மோடியின் அலங்கார பேச்சுக்கள் மக்களை கவலை அடைய வைத்துள்ளது. நாட்டில் மோடி அலையும் இல்லை. சுனாமியும் இல்லை. மோடி வெறும் புழுதிக்காற்று. அந்த காற்றும் தற்போது அடங்கி விட்டது.
ராகுல் காந்தியின் அமைதியான பேச்சு அவர் மீது மக்களுக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு தேர்தல் போன்று கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications