விமான நிலையங்களில் ஹேண்ட் பேக்குகளுக்கு இனி பாதுகாப்பு முத்திரை இருக்காது

டெல்லி, சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய 6 விமான நிலையங்களில் ஹேண்ட் பேக்குகளுக்கு பாதுகாப்பு முத்திரை பொருத்தப்படும் நடைமுறையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமானப் பயணங்களின்போது வழக்கமாக பின்பற்றப்படும் இரண்டு நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விமானங்களில் பயணிக்கும் பயணிகள் 7 கிலோ எடை வரை உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு அதிகமான எடையுள்ள பொருட்களை சரக்குப் பெட்டகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

No more security stamps on hand bag tags at six major airports

இதில் கைகளில் கொண்டு செல்லப்படும் கைப்பைகள் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு முத்திரை பொருத்தப்படும். இந்த நடைமுறையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விமான நிலையங்களில் பயணிகளிடம் நடத்தப்படும் சோதனையில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய விமான நிலையங்களில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

மின்னணு முறையிலான பயண அனுமதி சீட்டுக்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன்படி மின்னணு பயண அனுமதி சீட்டு, பயணிகள் செல்போனிற்கு சென்றுவிடும். இதனை விமான நிலையத்தில் காண்பித்தால், பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

விமான நிலைய அதிகாரிகள் அதனை ஸ்கேன் செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த இரு புதிய வசதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் ஓரிரு மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+