பெருந்துறை சிப்காட்டில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கருப்பணன்
பெருந்துறை சிப்காட்டில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கி வரும் சிப்காட் வளாகத்தில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அதிக அளவில் இருக்கும் தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து மாசு அதிகரித்து இருப்பதால் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், போராட்டக்குழுவினருடன் அமைச்சர் கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் பேசுகையில், இப்பகுதியில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவு நீரை வெளியேற்ற உறுதி அளித்துள்ளனர். இன்னும் 2 மாதங்களுக்குள் அதற்கான வழிமுறைகள் முழுவதுமாக மேற்கொள்ளப்படும். சிப்காட் வளாகத்தில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications