பாமகவைத் தவிர 'வேறு யாரும்' டெபாசிட் வாங்கக் கூடாது... ராமதாஸின் 'டபுள் மீனிங்' பேச்சு!
தர்மபுரி: பாமகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் டெபாசிட் கிடைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார்.
அவர் சொன்னது என்னவோ அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியைக் குறித்துத்தான். ஆனால் டாக்டரின் பேச்சில், பாமகவினருக்கு ஒட்டுமொத்தமாக ஒரு மெசேஜை அவர் வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பெண்ணாகரத்தில் நடந்த பிரசாரத்தின்போது ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது...

கோடி கோடியாக சொத்து குவித்த ஜெயலலிதா
ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

பாடம் புகட்டுங்கள்
கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
பெண் முதல் அமைச்சர் ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதுக்கடைகளை தாராளமாக திறந்துவிட்டிருப்பதால், பெண்களுக்கான
எதிரான குற்றங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துவிட்டன.

ஊழலில் திளைக்கும் திமுக, அதிமுக
ஊழலில் திளைக்கும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தக்க பாடம் புகட்ட இந்தியாவிலேயே அன்புமணி ராமதாசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

டெபாசிட் வாங்கக் கூடாது
திமுகவும், அதிமுகவும் டெபாசிட் வாங்கக் கூடாது.

வேறு கட்சிகளும் வாங்கக் கூடாது
வேறு கட்சிகளும் வாங்கக் கூடாது. அன்புமணி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரியை மாற்றுவார் என்றார் ராமதாஸ்.
இதில் அவர் வேறு கட்சிகளும் என்று யாரையோ மனதில் வைத்து பாமகவினருக்கு மெஜேச் சொல்லியுள்ளதாக ஒரு உட்பொருள் எடுத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications