யாரையும் கூட்டணியிலேயே இருங்கன்னு கட்டாயப்படுத்த முடியாது... தமிழிசையின் அந்தர்பல்டி
சென்னை: கூட்டணியை விட்டு செல்ல நினைப்பவர்களை கட்டுப்படுத்த முடியாது. இங்கேயே இ்ருங்க என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவைச் சேர்ந்த சமூக வலைதள ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "யாரையும் இந்தக் கூட்டணியில் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இன்று தமிழகம் இருக்கும் சூழலில் ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும்.
சிலர் கூட்டணியை விட்டு வெளியேறும் அதே நேரத்தில், பலர் கூட்டணிக்கு வரலாம். கூட்டணியில் ஏற்கனவே இருந்தவர்கள் உள்ளிட்ட எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு பயன்தரும் வலுவான கூட்டணி அமைக்கப்படும்" என்றார்.
பாஜக கூட்டணியில் இருந்தவரான விஜயகாந்த்துக்காக பாஜக கடுமையாக முயன்று வருகிறது. பாமக போனது பற்றிக் கூட பாஜக கவலைப்படவில்லை. ஆனால் விஜயகாந்த்துக்காக தவம் இருக்காத குறையாக கெஞ்சி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழிசையின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications