For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று பந்த்.. அடுத்தடுத்து விடுமுறைகள்.. வங்கி சேவை பாதிக்குமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இன்று பந்த், திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் வங்கி சேவை தொடர்ந்து பாதிக்கப்படுமா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாரத் பந்த்தை முன்னிட்டு வங்கி ஊழியர் சங்கங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுக்க இன்று வங்கிகளுக்கு விடுமுறை. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. அதற்கு அடுத்த நாளான திங்கள்கிழமை, விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றும் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

No panic for Bank customers for long leaves

ஆனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். ஏனெனில், நாளை மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் முழு நேரமும் திறந்திருக்கும். இதனால் வங்கி பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்பது அவர்கள் கருத்து.

இன்று விடுமுறை என்றபோதிலும், நாளையும், அதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதலும் வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என்பதால் தொடர் விடுமுறைகள், வங்கி வாடிக்கையாளர்களை பாதிக்காது என்கிறார்கள். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் பீதியடைய தேவையில்லை.

English summary
No panic for customers as the Banks will remain open on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X