மக்களுக்கு "பொங்கல் பரிசு" கூட தராத ஓ.பன்னீர் செல்வம்... அவ்வளவு சோகமா??
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பில் வழங்கப்படும் பரிசு தொகுப்பு, இந்த ஆண்டு வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில், வெல்லம், பச்சரிசி, ஏலம், முந்திரி, பாசி பயறு அடங்கிய, பரிசு தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் என, மொத்தம், 160 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பொங்கல் பரிசாக வழங்கியது.
ஆனால் பொங்கல் பண்டிக்கை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பரிசு பொருட்கள் விநியோகம் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்குவதை தமிழக அரசு நிறுத்திவிட்டதாக தெரிகிறது. நிதி நெருக்கடியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications