மின்சாரம் இல்லை: சென்னையில் 2வது நாளாக செல்போன், ஏடிஎம் சேவைகள் பாதிப்பு
சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் 2வது நாளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன், தொலைபேசி, ஏ.டி.எம். சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதில் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மீண்டும் வெள்ளக்காடாகியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனால் மக்களால் செல்போன், லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியவில்லை. செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் வசிக்கும் உறவினர்களால் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிய முடியவில்லை.
சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்து ஏ.டி.எம். மையம் சென்றவர்கள் சேவை இல்லாததால் அதிருப்தி அடைந்தனர்.
ஒரு சில இடங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுப்பதை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications