ஜல்லிக்கட்டு நடக்காததாலேயே மழை இல்லை: பாலமேடு மக்கள் குமுறல்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடக்காததாலேயே மழை இல்லை என பாலமேடு பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாயம் செழிக்க வேண்டுமானால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என அவர்கள
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்காததாலேயே மழை பொய்த்துப்போயுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தப்படாததால் தெய்வக்குத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்த ஆண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் தடையைமீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இதற்காக பாலமேட்டில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் இருப்பதாலேயே மழை பெய்யவில்லை என பாலமேடு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்காததால் தெய்வக்குத்தம் ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டுமானால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications