ஒரு "ரிப்பன்" கூட 'கட்' பண்ணாத ஓ.பன்னீர் செல்வம்... 'தியரி' மட்டும்தான், 'பிராக்டிகலே' இல்லை!!!!
சென்னை: முதல்வர் பதவியில் அமர்ந்து வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து விட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் ஒரு முதல்வராக அவர் பார்க்க வேண்டிய பல வேலைகளை இதுவரை அவர் செய்யவே இல்லை.
முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் வந்தது முதலே ஒரு சாதாரண அமைச்சரவை விடவும் படு நிதானமாக வேலை பார்த்து வருகிறார். அவர்தான் முதல்வர் என்றாலும் கூட இவரா முதல்வர் என்று அனைவரும் கேட்கும் அளவுக்கு ஆள் அரவமின்றி வேலை பார்த்து வருகிறார் பன்னீர் செல்வம்.
அடக்கமானவர், அமைதியானவர், அன்பானவர், பண்பானவர், கண்ணியமானவர், நல்ல பெயர் பெற்றவர், நல்லவர், சாந்தமானவர் என்று என்னவெல்லாம் நல்ல வார்த்தைகள், பண்பான வார்த்தைகள் உள்ளதோ அத்தனைக்கும் தகுதியானவர்தான் நமது முதல்வர். ஆனால் அவரது கைகளைக் கட்டிப் போட்டு வைத்து அவருக்கு மட்டுமல்லாமல் அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கும் கூட களங்கத்தை ஏற்படுத்தி விளையாடிப் பார்தது வருகிறார்கள் சிலர்.

செப்டம்பரில் 2வது முறையாக
2வது முறையாக தமிழகத்தின் முதல்வராக செப்டம்பர் 29ம் தேதி பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். இதற்கு முன்பு அவர் 2001ம் ஆண்டு முதல்வராக இருந்தார்.

50 நாட்கள் ஓவர்
முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் வந்து 50 நாட்களாகி விட்டன.

புதுஸ்ஸா எதுவுமே இல்லை
முதல்வராக பதவியேற்ற பின்னர் கோட்டையை விட்டு வெளியே எங்குமே போவதில்லை முதல்வர். இடையில் மதுரைக்கு ஒருமுறை போய் வந்தார். தனது சொந்த ஊருக்கு ஒருமுறை போய் வந்தார். பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குப் போய் வந்தார். அவ்வளவுதான். மற்றபடி சென்னையை விட்டு அவர் நகர்வதே இல்லை.

திட்டங்கள் இல்லை
முதல்வரான பின்னர் எந்த ஒரு திட்டத்தையும் பன்னீர் செல்வம் அறிவிக்கவில்லை. எந்தத் திட்டப் பணியையும் அவர் தொடங்கி வைக்கவில்லை. எந்த ஒரு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. அதாவது எதுவுமே நடக்கவில்லை என்பதே உண்மை.

அறிக்கைகள்
பெரும்பாலும் அறிக்கைகளை மட்டுமே முதல்வர் வெளியிடுகிறார். அதிலும் கூட பல இடங்களில் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, உத்தரவுப்படி, ஆலோசனைப்படி, முயற்சியின்படி என்ற வார்த்தைகளுடன்தான் அறிக்கைகள் வருகிறது. எனது அரசு என்று தப்பித் தவறிக் கூட அவர் கூறுவதில்லை.

அம்மா படம் இல்லாமல்
தலைமைச் செயலகத்தில் பல்வேறு தரப்பினர் வந்து அவரைச் சந்தித்தாலும் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைத்தான் பிரதானமாக வைத்து அவர்களுடன் பேசவே ஆரம்பிக்கிறார் முதல்வர். படம் இல்லாமல் அவர் பேசுவது கூட கிடையாது.

தியரி மட்டும்தான்... பிராக்டிகலே இல்லை!
முதல்வரான பின்னர் இதுவரை ஒரு திட்டத்தையும் தொடங்கி வைக்காமல், வெறும் அறிக்கைகள், கோப்புகளில் கையெழுத்து என தியரிட்டிகலாகவே போய்க் கொண்டிருக்கிறது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சி. எப்போது பிராக்டிகலுக்கு வருவார் அவர் என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர்.. கொட்டாவி விட்டபடி.!












Click it and Unblock the Notifications