வைகோ- திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடா? ஜி. ராமகிருஷ்ணன் விளக்கம்
மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்திரு
புதுச்சேரி: மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:
காவிரி நதிநீர் பிரச்சனையில் மக்கள் நலக் கூட்டணி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.
திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தது. இக்கூட்டம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் திருமாவளவன் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
எந்த ஒரு பிரச்சனை குறித்தும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கலந்து பேசியே முடிவெடுத்து வருகிறோம். அதன்படிதான் திமுக கூட்டம் குறித்தும் விவாதித்து முடிவெடுத்தோம்.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.