கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை கூடாது- ஹைகோர்ட் கறார் உத்தரவு!
கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலையில் இருந்த 3,500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலையிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று பணிகளும் வழங்கப்படாததால் ஊருக்குள் கடை அமைக்க இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராடியும் பெண்களே கடைகளையும் ,பாட்டில்களையும் அடித்து துவம்சம் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சேலம், கரூர், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் உயர்நீதிமன்றம் தலையிட்டு தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது, மேலும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை போலீஸ் தாக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications