தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை: அய்யாக்கண்ணு
தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : தமிழக அரசியல் கட்சிகள் என்றைக்குமே விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மரபணு விதைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகம், எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் பகுதிகளில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்த அவர், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை சந்தித்துப் பாலாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்தும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்தும் மனு அளித்தார்.
பின்பு நிருபர்களைச் சந்திக்கையில், விவசாயிகளுக்கான உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. எல்லா ஆட்சியிலும் விவசாயிகள் அடிமையாகவே இருந்து வந்துள்ளனர்.
அதிமுக, திமுக, விசிக உள்ளிட்ட எந்த கட்சியும் விவசாயிகளின் பிரச்னையில் உறுதுணையாக இருந்தது இல்லை. மத்திய, மாநில அரசுகள் இனி எந்த திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் அதனை தொடர்ந்து எதிர்ப்போம். நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications