காலியிடங்கள் அதிகரிப்பு… இட மாறுதல் இல்லை… தவிக்கும் சத்துணவு ஊழியர்கள்
நெல்லை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விருப்ப இடமாறுதல் கேட்டு சத்துணவு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 சத்துணவு பணியாளர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் பலர் இதில் கூடுதலாக வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சத்துணவு திட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பால்வாடி மற்றும் ஊட்டசத்து மையங்களில் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பலர் உயர் கல்வி படித்தவர்களும் அடக்கம்.
சத்துணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது இவர்களின் புகாராக உள்ளது. இவர்களது ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்றன.
சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூன்று பேர் பணியில் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் சொற்பமாகும். சத்துணவு அமைப்பாளர் என்றால் ரூ.8 ஆயிரம், சமையலருக்கு ரூ.3 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசிககு ஏற்ப பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்களின் விருப்ப இடமாறுதலையும் நிர்வாகம் கணடு கொள்ளவிலலை என்று கூறப்படுகிறது. இவர்களில் பலர் பல ஆண்டுகளாக விருப்ப இடமாறுதல் கேட்டு காத்திருக்கின்றனர்.
இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 சத்துணவு பணியாளர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் பலர் கூடுதலாக வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications