சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.. மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்.. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலின் சீற்றமும் அதிகரித்துள்ளது.

சுனாமி வதந்தியால் பீதி
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பேரலைகள் தாக்கப்போவதாக தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில் தீயாக பரவிய இந்த தகவலால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

சுனாமி எச்சரிக்கையில்லை
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜான்சிங் சவான் சுனாமி குறித்து பரவும் வதந்திகளை மறுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வதந்திகளை நம்பவேண்டாம்
மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சுனாமி குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

நாகையில் பரவிய வதந்தி
அண்மையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடல் உள்வாங்கியிருப்பதாகவும், இதனால் அம்மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் வதந்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications