நீலகிரி நாகம்பள்ளி மலைகிராமத்தில் ஒருவருமே வாக்களிக்கவில்லை.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டம் நாகம்பள்ளி மலைகிராமத்தில் காலையில் 9.30 மணிவரை ஒருவரும் வாக்களிக்கவில்லை. இதனால் தேர்தல் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டம் நாகம்பள்ளி என்ற மலைகிராமத்தில் காலை 9.30 மணி வரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
இதனைத் தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் தேர்தல் அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அடர்ந்த மலைப்பகுதியில் நாகம்பள்ளி கிராமம் அமைந்திருப்பதால் அதிகாரிகள் அங்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலை அக்கிராம மக்கள் புறக்கணித்துள்ளனரா? என்ற விவரம் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications