வடகிழக்குப் பருவமழை அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம் - எச்சரிக்கும் வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தினால் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் அதிக அளவில் கொட்டித்தீர்த்தாலும் சில மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.

North east monsoon action start next week - Met office

சென்னை, நாகையில் வடகிழக்குப் பருவமழை அதிக அளவில் பெய்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவில்லை.

இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை அடுத்த வாரம் முதல் மீண்டும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னையில் இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

அடுத்தவாரம் முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. மணிமுத்தாறில்10 செமீ மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி 8 செமீ, சேரன்மாதேவி, நாகர்கோவில் மயிலாடியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+