வடகிழக்கு பருவமழை துவங்கியது: இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்றே நேற்று துவங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில்,

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம். இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்த அன்றே வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.
கிழக்கு திசையில் கடலில் இருந்து ஈரப்பதமான காற்று தென்னிந்தியாவின் நிலப்பகுதி நோக்கி வீசியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு அல்லது அதைவிட 10 சதவீதம் குறைவாகவே பெய்யும்.
வடகிழக்க பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு 67 செ.மீ. மழை பெய்தது. அதாவது வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகம் பெய்தது.
இந்த ஆண்டு 39 முதல் 44 செ.மீ. வரை தான் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications