வடகிழக்கு பருவமழை 27ம் தேதி வரை வர வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் வரும் 27ம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சமீபத்தில் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவானது.இதன் காரணமாக தமிழக கடற்கரையோர மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்பட்டன.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மரை நோக்கி நகர்ந்து வருவதால்,தமிழகத்தில் வரும் 27ம் தேதி வரை பெருமழை பெய்ய வாய்ப்பு இல்லை என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் மிதமான மழை இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 28ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் முதலில் கடலூரை துவம்சம் செய்தது மழை. மெல்ல மெல்ல தீவிரமடைந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை புரட்டிப் போட்டது.
காற்றின் போக்கில் மாற்றம் ஏற்படாததால், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தள்ளிப்போவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதால், காற்று அந்தப் பகுதியை நோக்கி வீசிக்கொண்டிருக்கிறது. அதனால் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதமாகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18ம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு தாமதமாவதால் தீபாவளிக்கு மழையின்றி பட்டாசு வெடிக்கலாம் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ள வானிலை ஆய்வுமையம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications