வடகிழக்கு பருவமழை 27ம் தேதி வரை வர வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் வரும் 27ம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சமீபத்தில் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவானது.இதன் காரணமாக தமிழக கடற்கரையோர மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்பட்டன.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மரை நோக்கி நகர்ந்து வருவதால்,தமிழகத்தில் வரும் 27ம் தேதி வரை பெருமழை பெய்ய வாய்ப்பு இல்லை என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் மிதமான மழை இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 28ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் முதலில் கடலூரை துவம்சம் செய்தது மழை. மெல்ல மெல்ல தீவிரமடைந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை புரட்டிப் போட்டது.
காற்றின் போக்கில் மாற்றம் ஏற்படாததால், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தள்ளிப்போவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதால், காற்று அந்தப் பகுதியை நோக்கி வீசிக்கொண்டிருக்கிறது. அதனால் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதமாகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18ம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு தாமதமாவதால் தீபாவளிக்கு மழையின்றி பட்டாசு வெடிக்கலாம் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ள வானிலை ஆய்வுமையம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications