பணத் தட்டுப்பாடு நிலைமை டிச.30-க்கு பிறகும் தீராது.. அடித்து சொல்கிறார் ராகுல் !
வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் ஏற்பட்டிருக்கும் பணத் தட்டுப்பாடு டிசம்பர் 30-ந்தேதிக்கு பின்னரும் தொடரும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் ஏற்பட்டிருக்கும் பணத் தட்டுப்பாடு டிசம்பர் 30-ந்தேதிக்கு பின்னரும் தொடரும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்னும் ஏழு மாதங்கள் ஆனாலும் பணத் தட்டுப்பாடு நிலைமை சீராகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணம், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய அரசு கூறியது.

இதனால் அந்த பணத்தை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். இதனிடையே போதுமான பணம் அச்சிடாததால் பணத்தட்டுபாடு நிலவி கருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து கிட்டதட்ட 50 வது நாளை எட்டவுள்ளது. பணத்தை மாற்றிக் கொள்ளவதற்கான காலக்கெடு வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அந்நாளில் இருந்தே பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீர்ந்து விடும் என்று பிரமதர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 30-ந் தேதியோடு பணத்தட்டுப்பாடு முடிவுக்கு வராது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இகுறித்து அவர் கூறுகையில், டிசம்பர் 30-ந் தேதிக்குப் பிறகும் பணத் தட்டுப்பாடு பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தட்டுப்பாடு 30-ந் தேதியோடு முடிந்து விடாது என்பதை என்னால் உறுதியோடு சொல்ல முடியும். இந்த கடினமான சூழ்நிலை அடுத்த 7 மாதங்களுக்கும் மேல் அல்லது அதற்கு மேலாகவும் நீடிக்கும்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு ஊழலுக்கு எதிரானதல்ல. இதனால் பொருளாதாரம் முடங்கியுள்ளது. கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல. ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரானது. ரூபாய் நோட்டு ஒழிப்பால் 99 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications