ஒன்றும் சொல்வதற்கு இல்லை.. கூட்டணி குறித்து தமிழிசை
சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக டாக்டர் தமிழிசை தொடருவார் என்று தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தாலும், தமிழிசை சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் அவரையே மீண்டும் தலைவராக்க பாஜக தலைமை தீர்மானித்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களசை் சந்தித்தார். தமிழிசை. அப்போது அவர்களிடம் பேசுகையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் என்னை தேர்ந்தெடுத்த தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணியால் ஊழலற்ற ஆட்சியை தரமுடியும். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால், கூட்டணி குறித்து தற்போதைக்கு எதுவும் கூற இயலாது. தேர்தல் பிரசாரத்தில், மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications