அரசியலில் எதுவும் நடக்கலாம்.. டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பால் பாதிப்பு இல்லை.. வைகை செல்வன்
சென்னை: ஓ பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இவர்களது சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஒ பன்னீர் செல்வம் ஒருபக்கம் சட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டே மற்றொரு பக்கம் மக்கள் மன்றத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம் எனக் கூறி வருகிறார். இதன்படி திருச்சியில் அண்மையில் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

அதேபோல், கொங்கு மண்டலம் உள்பட 5 இடங்களில் ஓ பன்னீர் செல்வம் மாநாடு நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தார். டிடிவி தினகரனின் வீட்டிற்கு சென்று ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொது ஓ பன்னீர் செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்ட்டி ராமச்சந்திரனுன் உடன் இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரனும் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிடிவி தினகரன் கூறுகையில், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் போல நானும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம். எனக்கும் அவருக்கும் சுயநலம் கிடையது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும்.
அதை கபளீகரம் செய்து பணபலம் ஆணவத்தோடு செயல்படுவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்து தீயசக்தி திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இந்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் நானும் ஓபிஸ்சும் இணைந்து இருக்கிறோம்" என்றார்.
அதேபோல், ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், " எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளீர்கள் என்றே இதுவரை பலரும் என்னிடம் கேட்டார்கள். இந்தச் சூழலில் டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன். சசிகலாவைச் சந்திப்பது குறித்தும் கேட்டிருந்தோம். அவர் வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். வந்தவுடன் நிச்சயம் சந்திப்போம்" என்றார்
ஓ பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக டிடிவி தினகரனை - ஓபிஸ் சந்தித்தது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியதாவது:-

அதிமுக சரியான பாதையில்நேரான பாதியில் தெளிவான பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறது. தொடர்நது சட்டபோராட்டத்திலும் நிலைப்பாடுகளில் ஓபிஸ் தோல்வி அடைந்தார். அமமுகவில் இருந்து மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் சாரை சாரையாக தாய்கழக்த்தில் இணைந்து வருகிறர்கள்.
இப்படிப்பட்ட வேளையில் தான் இருவரும் சந்தித்துள்ளார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம். தர்மயுத்தம் வேண்டும் என்று போராடியவர்கள் மீண்டும் சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. வாக்கு வங்கிக்கு எந்த சேதரமும் ஏறப்ட போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications