கடலூர் லோக்சபா தொகுதி தேமுதிக வேட்பாளரும் மாற்றம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேமுதிக வேட்பாளர் பேராசிரியர் ராமானுசம் இன்று திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலா ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே நாமக்கல் தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேமுதிகவின் மகேஸ்வரன், விஜயகாந்த் பிரசாரம் செய்ய வந்தபோது ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்தார். இதனால் அந்த தொகுதிக்குப் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பேரா. ராமானுசம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக ஜெயசங்கர் என்பவர் போட்டியிடுவார் என்றும் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications