பி. எஃப் தொகைக்காக இனி உங்க ஆபீசுக்கு கால் கடுக்க அலைய வேண்டாம்.... புதிய வசதி அறிமுகம்
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை( பி. எஃப்) இனி எளிய முறையில் பெறுவதற்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையில், வருங்கால வைப்பு நிதியை பெற விரும்பும் தொழிலாளர்கள் தாங்கள் வேலைப்பார்த்த நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
தற்போது, அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய முறையின் படி, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தொழிலாளர்கள் பி. எஃப் அலுவலகத்தில் அளித்துவிட்டால் போதும். வேலைபார்த்த நிறுவனத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அவசியமில்லை. ஆதார் அட்டை எண், வங்கி விவரங்கள், டிஜிட்டல் கையெழுத்து ஆகியவற்றை சமர்பித்தப்பிறகு பிரத்யேக கணக்கு எண் (யு.ஏ.என்) வழங்கப்படும். விண்ணப்பதாரர் ஏற்கனவே சமர்பித்த விவரங்களின் அடிப்படையில் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். யு.ஏ.எண் பெற்ற 2 கோடி ஊழியர்கள் இந்த வசதியைப் பெற முடியும்.












Click it and Unblock the Notifications