பாமகவில் உதயமாகும் ஜெ. அணி? பொதுக்குழுவை புறக்கணித்தார் எம்.எல்.ஏ. கலையரசு!
Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காடுவெட்டி குரு, கலையரசு, கணேஷ்குமார் ஆகிய மூவரில் காடுவெட்டி குருவும், கணேஷ்குமாரும்தான் நேற்றைய பொதுக்குழுவில் ஆஜராகி இருந்தனர். அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவான கலையரசு பொதுக்குழுவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
தேமுதிக, புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாணியில், தமது அணைக்கட்டு தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கலையரசு அனுமதி கோரி கடிதம் எழுதியிருப்பதாகவும் இந்த காத்திருப்பு நீடிப்பதாலேயே பொதுக்குழுவில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது பாமக தலைமைக்கும் தெரியும் என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications