உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி - சீமான்
ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சீமான், அமீர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரடப்பட்ட வழக்கில் அவர்கள் ஆஜராகாததால் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் அவர்கள் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு ஆஜரானார்கள். அவர்கள் தரப்பில் வழக்கறிஞர் சோமசுந்தரம் மனு அளித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 30க்தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது அவர், தமிழகத்தின் ஒவ்வொரு ஜீவாதார பிரச்சனைக்கும் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம். மத்திய அரசு தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
மற்ற மாநிலங்களில் எதிர்பாராத விபத்துக்களில் பொதுமக்கள் பலியானால் கூட அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் கூறி அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதும், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோதும் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சிறைபிடித்து அவற்றை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கையை சேர்ந்த அமைச்சர் பேசியபோதும் அதற்கு மத்திய அரசோ, பிரதமர் மோடியோ பதில் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.
தற்போது காவிரி பிரச்சனையில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனையிலும் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இவ்வாறு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டியுள்ளது.
இனிமேலாவது தமிழக மக்களையும், தமிழக மீனவர்களையும் இந்திய மக்களாக கருதி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எ