செல்போனில் கோபமாக பேசிவிட்டு விடுதி மாடியில் இருந்து குதித்து நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை
சென்னை: சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள கே.கே. நகரைச் சேர்ந்த பத்மராஜ் என்பவரின் மகள் பவித்ரா(17). அவர் சென்னை பெரம்பூர் பெரவள்ளூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அந்த கல்லூரி மாணவிகள் பலர் சென்னையை அடுத்து உள்ள புழல் விநாயகபுரம் கே.வி.ஆர். நகரில் இருக்கும் 3 அடுக்குமாடி விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். பவித்ராவும் அந்த விடுதியல் தங்கியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்த பவித்ரா செல்போனை எடுத்துக் கொண்டு மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் யாருடனோ செல்போனில் நெடுநேரம் பேசியுள்ளார். பேசிக் கொண்டிருக்கையிலேயே இணைப்பை துண்டித்த அவர் கோபத்தில் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த பவித்ரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிர் இழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகிறார்கள். அவர் யாருடன் போனில் பேசினார், காதல் விவகாரமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications