செல்போனில் கோபமாக பேசிவிட்டு விடுதி மாடியில் இருந்து குதித்து நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை
சென்னை: சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள கே.கே. நகரைச் சேர்ந்த பத்மராஜ் என்பவரின் மகள் பவித்ரா(17). அவர் சென்னை பெரம்பூர் பெரவள்ளூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அந்த கல்லூரி மாணவிகள் பலர் சென்னையை அடுத்து உள்ள புழல் விநாயகபுரம் கே.வி.ஆர். நகரில் இருக்கும் 3 அடுக்குமாடி விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். பவித்ராவும் அந்த விடுதியல் தங்கியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்த பவித்ரா செல்போனை எடுத்துக் கொண்டு மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் யாருடனோ செல்போனில் நெடுநேரம் பேசியுள்ளார். பேசிக் கொண்டிருக்கையிலேயே இணைப்பை துண்டித்த அவர் கோபத்தில் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த பவித்ரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிர் இழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகிறார்கள். அவர் யாருடன் போனில் பேசினார், காதல் விவகாரமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications