ஓரிரு நாளில் ஒன்று கூடுவோம்.. சேதி சொன்ன ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்ற அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக அணிகள் இணையப் போவதாக கடந்த 2 நாட்களாகவே பரபரப்பு கிளம்பிய நிலையில், முதல்வர் பழனிசாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி ஜெயலலிதா சமாதிக்கு வந்து அணிகள் இணைப்பு குறித்து அறிவிக்கப்போவதாக நேற்று மாலை செய்திகள் பரவின.

 O . Paneerselvam assures amdk merger will be within 2 days

இதற்கு ஏற்றாற்போல ஜெயலலிதாவின் சமாதியும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. எனினும் அணிகள் இணைப்பு நடப்பதில் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்.

எந்த கருத்து வேறுபாடும் அதிமுகவில் இல்லை. ஜெயலலிதா, எம்ஜிஆர் வளர்த்த கட்சியை பலப்படுத்த அதிமுக ஒன்றினைந்து செயல்படும். தமிழக மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+