என் மன பாரம் இன்றோடு அகன்றுவிட்டது... நிம்மதி பெருமூச்சில் ஓ.பன்னீர்செல்வம்!
தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : என் மனதில் இருந்த பாரம் இன்றோடு அகன்றுவிட்டது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அஇஅதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன. இரு அணிகளும் இணையும் சூழலை ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்படுத்தி கொடுத்தது.
அஇஅதிமுகவின் ஒன்றறை கோடி தெண்டர்களின் விருப்பத்திற்கேற்ப்ப கழக ஒருங்கினைப்பாளராக மாண்புமிகு அம்மாவின் வழியில் கழகத்தை வழிநடத்துவேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 21, 2017
என் மனதில் இருந்த பாரம் இன்றோடு அகன்றுவிட்டது.#AIADMKMerger
— O Panneerselvam (@OfficeOfOPS) August 21, 2017












Click it and Unblock the Notifications