''நாளைய பிரதமர், ஒப்பிலா தலைவி, அன்பின் இலக்கணம், வெற்றித் திருமகள், முத்தமிழ் தத்துவம்''!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடுவதில் வழக்கம் போலவே அதிக கவனம் செலுத்தினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அவர் தமது உரையின் தொடக்கத்தில் சுமார் 20 நிமிடம் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளுவதிலேயே மும்முரமாக இருந்தார்.

முத்தமிழ் தத்துவம்
ஓ.பன்னீர்செல்வம் தமது உரையின் போது ஜெயலலிதாவை ஒப்பிலா தலைவி, அன்பின் இலக்கணம் மற்றும் முத்தமிழ் தத்துவம் என்று புகழ்ந்தார்.
நாளைய பிரதமர்
அதேபோல் பாரத தேசத்தை உலக அரங்கில் உயர்த்தப் போகும் மகத்தான தலைவி என்றும் புகழாரம் சூட்டினார் ஓ.பி.எஸ்.
வெற்றித் திருமகள்
மேலும் நாளைய பாரதத்தை நிர்மாணிக்கப் போகும் வெற்றித் திருமகள் என்றும் ஜெயலலிதாவுக்கு புகழ் பாடினார் ஓ.பி.எஸ்.












Click it and Unblock the Notifications