குடியரசு தினத்தன்று கோட்டையில் தேசிய கொடியேற்றும் முதலாவது முதல்வர் ஓபிஎஸ்!

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நாளை குடியரசு தின நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கொடியேற்ற உள்ளார். இதனால் கோட்டையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தேசிய கொடியேற்றி வைக்க உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர்கள்தான் தேசியக் கொடியேற்றுவது நடைமுறை. ஆனால் இந்த ஆண்டு நாளைய குடியரசு தின நாளில் கோட்டையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடியேற்ற உள்ளார்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஆளுநர்கள் கொடியேற்றுவது நடைமுறையாக இருந்து வந்தது. 1974-ம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று மாநிலங்களின் முதல்வர்களும் குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் கொடியேற்றும் நடைமுறை உருவானது.

O Panneerselvam to hoist national flag on Republic Day

இந்த நடைமுறை உருவாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கிறார் வித்யாசகர் ராவ்.

அவர் மகாராஷ்டிரா மாநில முழு நேர ஆளுநர் என்பதால் அம்மாநிலத்தில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கொடியேற்ற உள்ளார். இதனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் குடியரசு தினமான நாளை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் குடியரசு தின நாளன்று கொடியேற்றும் முதலாவது முதல்வர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+