ஜல்லிக்கட்டு அவசர சட்டம்- கோட்டையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: ஜல்லிகட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு உரிமை. இந்த உரிமைக்கான தடையை உடைக்கும் வரலாற்று புரட்சியில் இறங்கியது தமிழகத்து இளைஞர் பெரும்படை.

இப்புரட்சியின் முதல் வெற்றியாக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுவிடுதல் நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கும் திருத்தத்துக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின்னர் ஆளுநர் இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்க உள்ளார். இன்று மாலை ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகிறார்.
இதனிடையே தலைமை செயலகத்தில் அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications