For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இருமுடி கட்டி சபரிமலைக்குப் புறப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்

Google Oneindia Tamil News

பெரியகுளம்: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம் இருமுடி கட்டி சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

வருடா வருடம் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடமும் அவர் வழக்கம் போல மாலை போட்டிருந்தார்.

அதிமுக பொதுக் குழு செயற்குழு உள்ளிட்டக் கூட்டங்களில் பிசியாக இருந்து வந்த அவர் தனது கடமை தவறாமல் இன்று சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

O Panneerselvam leaves for Sabarimalai

பெரியகுளத்தில் உள்ள ஐயப்பன் மடத்தில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். பின்னர் இருமுடி கட்டி உறவினர்கள், நண்பர்கள் சகிதம் கார் மூலமாக சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான அதிமுகவினர், ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

English summary
TN PWD minister O Panneerselvam left for Sabarimalai today from Periyakulam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X