கலவரம் பாதித்த பகுதிகளை பார்க்கவில்லை.. தூத்துக்குடியில் இருந்து அவசரமாக வெளியேறிய ஓ.பி.எஸ்!
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை கிளம்பிவிட்டார்.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்றரை மணி நேரம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரம் செலவிட்டார். இதன்பிறகு 10 நிமிடங்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரம் செலவிட்டார் பன்னீர்செல்வம்.
அங்கு ஒரு ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் பத்து நிமிடங்களிலேயே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விமானத்தில் சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம்.

பாதிக்கப்பட்ட பகுதிகள்
ஆனால், போலீசாரின் தடியடி, துப்பாக்கி சூட்டால் தூத்துக்குடியின், திரேஸ்புரம், அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். சிறுவர்கள் உடல்களில் கூட போலீஸ் லத்தி தழும்பு உள்ளது.

மக்களை பார்க்கவில்லை
ஆனால், பன்னீர்செல்வம் அங்கு சென்று போலீசாரால் சேதப்படுத்தப்பட்ட வீடுகள், அம்மக்களை சந்தித்து விவரம் கேட்கவில்லை, ஆறுதலும் கூறவில்லை.
போராட்டத்தின்போது, மர்மமாக எரிந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிடவில்லை

கடமைக்கு பார்வை
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தையும் பன்னீர்செல்வம் நடத்தவில்லை என்பதால், கடமைக்கு பார்வையிட்டு சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடியில் இருந்து கூடிய விரைவில் கிளம்புவதில் பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. அவர் பேட்டியளிக்கும்போது கூட முகம் மிகவும் சோர்வாகவும், விரக்தியுடனும் காணப்பட்டது.

கடம்பூர் ராஜு நிலை
நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டபோது, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களும், அவர்களின் உறவினர்களும், அமைச்சரை கேள்விகளால் துளைத்தனர். அவரால் பதிலளிக்க முடியாமல் திணறினார். இன்றும் அதே நிலை பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரால் பதில் சொல்ல முடியாது என்பதை அறிந்தே முதலிலேயே மீடியாக்களை இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications