அதிமுக அணிகள் இணைப்பில் மோடி நல்லெண்ணத்தோடு செயல்பட்டார் - ஓபிஎஸ்
அணிகள் இணைவது குறித்து பிரதமரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் இணைவது நல்லது என்றார். அணிகள் இணைப்பு குறித்து பிரதமர் கூறியது நல்ல யோசனை என்பதால் ஏற்றுக்கொண்டேன்.
Recommended Video

சென்னை: பிளவு பட்ட அதிமுக இணைய வேண்டும் என்று நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் பிரதமர் மோடி ஆலோசனை கூறினார் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
துணைமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதாகவும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கான ஆளுமையும் தகுதியும் அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு என்னை கட்டாயப்படுத்தியே முதல்வர் பதவியை ஏற்க கூறினர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளில் திறன்பட கையாண்டு சிறப்பாக ஆட்சி நடத்தினேன்.

கட்டாய பதவி விலகல்
சிறப்பாக ஆட்சி நடத்தியை பொறுக்க முடியாமல் பதவி விலகுமாறு சசிகலா கூறினார். கட்டாயத்தின் பேரிலேயே முதல்வராக பதவியேற்றேன். கட்டாயத்தின் பேரிலேயே பதவியும் விலகினேன்.

அணிகளுக்குள் பிளவு
டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏக்கள் ஆத்ரவுடன் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறாராமே என பிரதமர் கேட்டதற்கு ஆம் என்றேன். அ.தி.மு.கவில் தினகரன் சர்வாதிகார போக்கை கையாண்டதால் அணிகளில் பிளவு ஏற்பட்டது.

பிரதமர் மோடி இணைப்பு பேச்சு
அணிகள் இணைவது குறித்து பிரதமரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் இணைவது நல்லது என்றார். அணிகள் இணைப்பு குறித்து பிரதமர் கூறியது நல்ல யோசனை என்பதால் ஏற்றுக்கொண்டேன். நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் பிரதமர் மோடி ஆலோசனை கூறினார்.

கருத்து வேறுபாடு இல்லை
அதிமுக இணைப்பு பற்றி இத்தனை மாதங்கள் கழித்து ஒ.பன்னீர் செல்வம் கருத்து கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் நிலைப்பாடு
பாஜகவுடன் கூட்டணி எதுவுமில்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டதே இதற்கு உதாரணம். எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினாரோ அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். அதே நிலைப்பாடுடன்தான் இப்போதும் இருக்கிறோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications