கிணற்றை தானமாக கொடுக்க ஓ.பி.எஸ் தரப்பு சம்மதம்.. போராடிய மக்கள் மீது வழக்கு பதிவு
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிலத்திலுள்ள கிணறுக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் 18 சென்ட் பரப்பில் மூன்று பெரிய கிணறுகள் உள்ளன.

மழை பொய்த்த நிலையில், ஊர் பொதுக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனது. இதற்கு பன்னீர்செல்வம் வீட்டு கிணறுகள் முக்கிய காரணம் என்று ஊர் மக்கள் குற்றம் சாட்டியதோடு, அந்த கிணற்றை ஊர் மக்களுக்கு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் மற்றும் 100 ஆண்கள் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விஷயம் விபரீதமாவதை தொடர்ந்து கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்களும்-பன்னீர்செல்வம் தரப்பும் இன்று பேச்சுவார்த்தை நடத்தின.
இதில் கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 சென்ட் நிலத்தை கிராமத்திற்கு தானமாக எழுதி வைக்க பன்னீர்செல்வம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
நாளை மறுநாளே பத்திரப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications