கிணற்றை தானமாக கொடுக்க ஓ.பி.எஸ் தரப்பு சம்மதம்.. போராடிய மக்கள் மீது வழக்கு பதிவு
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிலத்திலுள்ள கிணறுக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் 18 சென்ட் பரப்பில் மூன்று பெரிய கிணறுகள் உள்ளன.

மழை பொய்த்த நிலையில், ஊர் பொதுக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனது. இதற்கு பன்னீர்செல்வம் வீட்டு கிணறுகள் முக்கிய காரணம் என்று ஊர் மக்கள் குற்றம் சாட்டியதோடு, அந்த கிணற்றை ஊர் மக்களுக்கு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் மற்றும் 100 ஆண்கள் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விஷயம் விபரீதமாவதை தொடர்ந்து கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்களும்-பன்னீர்செல்வம் தரப்பும் இன்று பேச்சுவார்த்தை நடத்தின.
இதில் கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 சென்ட் நிலத்தை கிராமத்திற்கு தானமாக எழுதி வைக்க பன்னீர்செல்வம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
நாளை மறுநாளே பத்திரப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications