இரட்டை இலை சின்னம் பறிபோக காரணம் இவர்தான்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏ சொல்வதை பாருங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான தங்கதமிழ் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூரில் நேற்று டிடிவி தினகரன் தரப்பு நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அவரது ஆதரவாளரான தங்கதமிழ் செல்வன் உட்பட 14 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த ஆயத்தப் பணிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தங்க தமிழ்ச் செல்வன் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் , அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கும், ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம். மேலூரை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும். இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications