போரூர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 10 ஒடிஷா தொழிலாளர்கள் கதி என்ன?
சென்னை: தமிழகத்தை உலுக்கிய போரூர் மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் சிக்கிய 10 ஒடிஷா மாநில தொழிலாளர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.
சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு சனிக்கிழமையன்று மாலை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. 30க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று மூன்றாவது நாளாக அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிஷா மாநிலம் கஜபதி மாவட்டம், காசிநகர் பகுதியைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் உட்டி பாப்பா ராவ் (வயது 50) என்பவர் மட்டும் நேற்று இரவு உயிரோடு மீட்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உட்டி பாப்பா ராவின் மனைவி மற்றும் இரண்டு மகள்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதேபோல் மொத்தம் 10 ஒடிஷா மாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஒடிஷா மாநில எம்.எல்.ஏ சூரிய ராவ், தமிழக அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications