போரூர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 10 ஒடிஷா தொழிலாளர்கள் கதி என்ன?
சென்னை: தமிழகத்தை உலுக்கிய போரூர் மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் சிக்கிய 10 ஒடிஷா மாநில தொழிலாளர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.
சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு சனிக்கிழமையன்று மாலை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. 30க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று மூன்றாவது நாளாக அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிஷா மாநிலம் கஜபதி மாவட்டம், காசிநகர் பகுதியைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் உட்டி பாப்பா ராவ் (வயது 50) என்பவர் மட்டும் நேற்று இரவு உயிரோடு மீட்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உட்டி பாப்பா ராவின் மனைவி மற்றும் இரண்டு மகள்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதேபோல் மொத்தம் 10 ஒடிஷா மாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஒடிஷா மாநில எம்.எல்.ஏ சூரிய ராவ், தமிழக அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications