பரவும் டெங்கு.. வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக, வெல்லம் தயாரிக்கும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு சுகாதார அதிகாரிகள் குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

ராயகிரி பகுதியில் கருப்பு சாரிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லம் செய்யப்படும் பகுதிகளில் ஆய்வுக்களை நடத்தினர். இந்த இடத்தில் டெங்கு ஒழிப்புக்காக, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த டயர்களில் தேங்கியிருந்த தண்ணீரை சுட்டிக்காடி, இவற்றில்தான் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் என்று உணர்த்தி டயர்களை அப்புறப்படுத்த வைத்தனர்.

வெல்லத்தை ப்ளீச் பண்ண காஸ்டிக் சோடாவை, அதன் பின்விளைவுகளை அறியாமலே பயன்படுத்தியதை தவிர்க்க அதிகாரிகள் குழுவினர் வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடம் அறிவுறித்திச் சென்றனர்.













Click it and Unblock the Notifications