நெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்.. ரூ.500, 1000 மட்டும் 2 லட்சம்!
நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.500ல் 202 நோட்டுகளும், ரூ.1000ல் 84 நோட்டுகளுமாக ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் நோட்டுகள் இருந்தன.
நெல்லை: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறி்விக்கப்பட்டதால் நெல்லையப்பர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பல நோட்டுகள் பழைய நோட்டுகளாக இருந்ததால் அதிகாரிகள் திகைத்தனர்.
கடந்த 8ம் தேதி இரவு மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாயா நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதை தொடர்ந்து வங்கிகளில் நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோத வருகிறது. சில்லரை நோட்டுகளை பெற ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் வரிசையில் காத்திருக்கிறது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் உண்டியலை டிசம்பர் 31ம் தேதிக்குள் திறந்து எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோயில் உண்டியலை திறந்து பணத்தை எண்ணும் போது மதிப்பு குறைந்த சில்லரை பணத்தை தனி நபரிடம் மாற்ற கூடாது எனவும், அவ்வாறு மாற்றினால் கோயில் நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இதில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 299 ரூபாயும், தங்கம் 81 கிராம் 500 மில்லியும், வெள்ளி 698 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த பழைய ரூபாய் நோட்டுகளான ரூ.500ல் 202 நோட்டுகளும், ரூ.1000ல் 84 நோட்டுகளுமாக ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் நோட்டுகள் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவை அனைத்தையும், வங்கிகள் வாயிலாக மாற்ற வேண்டிய தேவையுள்ளது.












Click it and Unblock the Notifications