லேடி டாக்டரின் இடுப்பில் கிள்ளி விளையாடிய ”சில்மிஷ தாத்தா” - சேலத்தில் வழக்கு பதிவு
சேலம்: சேலத்தில் பெண் மருத்துவரின் இடுப்பை கிள்ளி சிஷ்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரட்ஸ் ரோட்டில் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு உதவி கால்நடை மருத்துவராக நாசோ மீனாட்சி என்பவர் பணியாற்றுகிறார்.

கடந்த 19 ஆம் தேதி மருத்துவர் நாசோ மீனாட்சி பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த முதியவர் பழனிசாமி என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் நாயை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் மகன் ராஜாவும் சென்றுள்ளார்.
நாயை பரிசோதனை செய்த டாக்டர் நாசோ மீனாட்சி நாய்க்கு மருந்து எடுக்க அவரது அறைக்குள் சென்றபோது அவரை பின் தொடர்ந்து சென்ற முதியவர் பழனிசாமி திடீரென டாக்டரின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத, டாக்டர் நாசோ மீனாட்சி ஆவேசத்தில் முதியவரை திட்டியுள்ளார். அவரின் கூச்சல் கேட்டு உள்ளே வந்த மகன் ராஜா தனது தந்தையை மருத்துவர் திட்டுவதை கண்டு அவரும் டாக்டரை தாறுமாறாக பேசியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட டாக்டர் நாசோமீனாட்சி சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகிதா மூன்று பிரிவுகளின் கீழ் தந்தை, மகன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications