விருதுநகரில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாயமானதால் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
விருதுநகரில் வங்கிக்கணக்கில் இருந்த பணம் மாயமானதால் மூதாட்டி ஒருவர் வங்கி முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
விருதுநகர் : தனது கணக்கில் இருந்த பணம் மாயமானதை அறிந்த மூதாட்டி, வங்கி வாசல் முன்பு தீக்குளிக்க முயன்றதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி முத்து இருளி. இவர் அங்குள்ள தேசிய வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். இவர் இந்த கணக்கில் கடந்தாண்டு ரூ.20 ஆயிரம் வரவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்குச் சென்று பார்த்த போது, முத்து இருளி கணக்கில் ரூ.10 ஆயிரத்திற்கு மட்டுமே இருப்பதாகக் கூறி அதிகாரிகள் ரசீது கொடுத்துள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வங்கியில் உள்ள அதிகாரிகளைப் பார்த்து கேட்டதற்கு, உங்கள் கணக்கில் அவ்வளவுதான் பணம் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மூதாட்டி முத்து இருளி அதை ஏற்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மனமுடைந்த மூதாட்டி முத்து இருளி நேற்று மாலை கையில் தூக்கு வாளியோடு வங்கிக்கு வந்தார். வங்கி வாசலில் நின்றபடி தூக்கு வாளியில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணைய தன் மீது ஊற்றி தீவைக்க முயற்சி செய்தார்.
இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள் அவரை தடுத்து அருப்புகோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அங்கு வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடம், மூதாட்டியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications