விருதுநகரில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாயமானதால் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
விருதுநகரில் வங்கிக்கணக்கில் இருந்த பணம் மாயமானதால் மூதாட்டி ஒருவர் வங்கி முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
விருதுநகர் : தனது கணக்கில் இருந்த பணம் மாயமானதை அறிந்த மூதாட்டி, வங்கி வாசல் முன்பு தீக்குளிக்க முயன்றதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி முத்து இருளி. இவர் அங்குள்ள தேசிய வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். இவர் இந்த கணக்கில் கடந்தாண்டு ரூ.20 ஆயிரம் வரவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்குச் சென்று பார்த்த போது, முத்து இருளி கணக்கில் ரூ.10 ஆயிரத்திற்கு மட்டுமே இருப்பதாகக் கூறி அதிகாரிகள் ரசீது கொடுத்துள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வங்கியில் உள்ள அதிகாரிகளைப் பார்த்து கேட்டதற்கு, உங்கள் கணக்கில் அவ்வளவுதான் பணம் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மூதாட்டி முத்து இருளி அதை ஏற்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மனமுடைந்த மூதாட்டி முத்து இருளி நேற்று மாலை கையில் தூக்கு வாளியோடு வங்கிக்கு வந்தார். வங்கி வாசலில் நின்றபடி தூக்கு வாளியில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணைய தன் மீது ஊற்றி தீவைக்க முயற்சி செய்தார்.
இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள் அவரை தடுத்து அருப்புகோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அங்கு வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடம், மூதாட்டியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications