என்ன கொடுமை.. இளைஞரை கொன்று போலீஸ் ஸ்டேசனில் தலையை வீசிய கொலையாளி கைது

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் இளைஞர் தலையை வீசி சென்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கடலூர் : ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் இளைஞரின் தலையை வீசி சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வினோத் என்பதாகும், முன் விரோதத்தில் சுவேதனை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த சுவேதன், 17 ஒரு கொலை வழக்கில் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் இன்று பாகூரில் உள்ள ஏரிக்கரையில் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்துள்ள சுவேதனை அடையாளம் தெரியாதவர்கள் கொலை செய்து உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை இருசக்கர கொண்டு வந்து ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் தூக்கி எரிந்து விட்டு தப்பித்து சென்றனர்.

One arrest in youth murder case Reddichavady Police Station

இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் போலீஸ் ஸ்டேசனுக்குள் தலைமைய வீசி சென்ற காட்சி பதிவாகியிருந்து. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை நடந்து வந்தது. கொலை செய்யப்பட்டவரின் உடல் புதுச்சேரி மாநிலம் பாகூரில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், சுவேதனை கொலை செய்த இரண்டு நபர்களில் ஒருவரான வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதில் முன்விரேத காரணமாக சுவேதனை கொன்று விட்டு தலையை வீசிச்சென்றதாக வினோத் தகவல் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+