சென்னை மைதானத்திற்கு கமாண்டோ, அதிதீவிர படை பாதுகாப்பு.. சாலைகளுக்கு சீல்: தீயா வேலை செய்யும் போலீஸ்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ மற்றுஹம் அதிதீவிர படை பாதுகாப்பு போடப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ மற்றும் அதிதீவிர படை பாதுகாப்பு போடப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்படும் என சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.

கமாண்டோ படை, அதிதீவிர படை
சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ படையின் ஒரு அணியும் அதிதீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளாது.

பாதுகாப்பு அதிகரிப்பு
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலைகளுக்கு சீல்
மேலும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும் சென்னை போலீஸ் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அறிவிப்பு
பலத்த சோதனைக்குப் பிறகே பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? குடும்ப பின்னணி தெரியுமா? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
Vaibhav Suryavanshi: பொட்டு வச்ச தங்கக் குடம்.. லப்பர் பந்து சீனை ரீகிரியேட் செய்த வைபவ் சூர்யவன்சி! வீடியோவைப் பாருங்க!












Click it and Unblock the Notifications