கரூரில் எழுத்தாளருக்கு எதிராக தொடரும் போராட்டம் – கல்வீச்சு, தாக்குதல், ஆதரவாளர்களுக்கு அடி,உதை!
கரூர்: எழுத்தாளர் புலியூர் முருகேசன் எழுதிய "பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு" என்ற நாவலுக்கு எதிராக கரூரில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், முருகேசன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
முருகேசனின் நாவலில் தங்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்கள் இருப்பதாக கொங்கு வேளாளர் எனப்படும் கவுண்டர் சமூகத்தினர் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த புத்தகத்தை தடை செய்யக்கோரி, திருச்சி கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்துகள் மீது கல்வீச் தாக்குதல் நடத்தியதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. திண்டுக்கல் மாவட்டம் ஆனைப்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் முருகேசன், கரூர் மாவட்டம் புலியூரில் வசித்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை ஒரு கும்பல், எழுத்தாளர் புலியூர் முருகேசனை காரில் கடத்திச் சென்று தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், எழுத்தாள ருக்கு ஆதரவாக ஊடகங்களில் கருத்து தெரிவித்த திருக்குறள் பேரவை நிர்வாகி மேலை.பழனியப்பன் வீட்டை சிலர் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக் கினர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் அவர்கள் கரூர் பேருந்து நிலையம், வையாபுரி நகர், புறவழிச் சாலை பகுதிகளில் பேருந்துகள் மீது கல் வீசித் தாக்கினர்.
இதில் 5 க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக 10 க்கும் மேற்பட்டோர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் முருகேசன் கூறும்போது, "நான் எழுதியது திருநங்கை குறித்த கதை. சில தகவல்களை கற்பனை கலந்து எழுதியுள்ளேன்.
சாதி அபிமானமோ, எதிர்ப்போ எனக்கு கிடையாது. இதுகுறித்து என்னிடம் கேட்டபோது, நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்டுக்கொள் வதாகத் தெரிவித்துள்ளேன்' என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications