புதுக்கோட்டை: கோழி சந்தைக்குள் புகுந்த அரசு பேருந்து... ஒருவர் பலி - 25 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோழிச்சந்தைக்குள் புகுந்தது. சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் படுகாயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து புதுக்கோட்டை அருகே ராஜாளிபட்டியில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கோழி சந்தைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல அரசு பேருந்துகள் காலவதியான நிலையிலேயே உள்ளன. அவற்றை சரியாக பராமரிக்காத காரணத்திலேயே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு பேருந்து விபத்து காரணமாக காலையில் புதுக்கோட்டை-மணப்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications