சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து- 2 பேர் பலி-10 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே டி. மாணகசேரி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளிகள் பலியானார். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாணகசேரி பட்டாசு ஆலையில் இன்று பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையின் 10 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த அறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் இருளப்பன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அணைத்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications