இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் என்பவரை, சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை: இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித்தொடர்பாளராக இருந்தவர், சசிகுமார். இவர், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த வழக்கை, முதலில் துடியலூர் போலீஸார் விசாரித்துவந்தனர். அதில், முன்னேற்றம் இல்லாததால், அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர் கைதுசெய்யப்பட்டார். மேலும், முபாரக் மற்றும் சதாம் ஆகிய இருவர் முக்கியக் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.
இவர்களில் சதாம் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சதாம் கைதுக்குப் பிறகு பாலக்காட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார் சுபேர். இதனிடையே தனது மனைவியைப் பார்க்க கிணத்துக்கடவு ரயில்வே கேட் அருகே வந்த சுபேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 2 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த கொலையில் தொடர்புடைய முபாரக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications